|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
a |
|
தொடர்கட்டுரை-3- பகுதி.4 கம்பனிடம் கலந்த சக்தி!
-சக்தி சக்திதாசன், லண்டன் 4. தாமரை மலர்கள் அகழிக்குப் போனது ஏன்?
கம்பனின் இலக்கியம் சுந்தரமானது, சுகந்தமானது,
சுவையானது. கரும்பில் அடிக்கரும்பு சுவை கூடியது என்பார்கள். கம்பராமாயணம்
என்னும் அவனது இலக்கியத்தில் அவன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட கற்பனை எல்லைகளை
விரித்துத் தன் திறமைக்கு தானே சவால் விடுகின்றான். மனதிலே பூத்து நின்ற
அற்புதமான நகரின் வனப்புகளை, அந்நகரிலே வாழும் மக்களின் குணாதிசயங்களை
கோபுரமாக்குகின்றான்.
இராமனுடைய நாட்டிலே உள்ள பெண்கள் அத்தனை
பேரும் அழகில் சிறந்தவர்களாம். அவர்களின் அழகைக் கண்ட தாமரைகள் இந்த நாட்டின்
பெண்களின் அழகிற்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு
ஓடிச் சென்று, அந்நகருக்கு வெளியேயுள்ள கோட்டையைச் சுற்றியுள்ள அகழிக்குள்
கூட்டமாய் மலர்ந்து விட்டதாம். வாள் - ஒளி, மொய்ம்பு - வலிமை மலைக்க - போரிட (கம்பனின் சக்தி இங்கு தொடரும்)
|
| முகப்பு |