........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:121

வானம்

வாயுக்களால்
வடிமைக்கப்பட்ட
கூரை!

புவிஈர்ப்பு விசைக்கெதிராய்
புறப்பட்ட தாவரங்கள்
தொட்டு விடத் துடிக்கும்
தொட முடியாத் திரை!

நிலத்தைப் பசுமையாக்கும்
நெடுந்தூரத்து
நீலம்!

ஒட்டுத்துணிகளால் தைக்கப்பட்ட
ஊதா நிற
ஓட்டைக் குடை!

ஞாயிறும், திங்களும்
நட்சத்திரங்களும்
நாள்தோறும் வந்து
நடித்து விட்டுச் செல்லும்
நாடக மேடை!

உலகை உழவை
உயிர்ப்பிக்கும்
கடவுள்!

-"மீன்கொடி" கோவிந்தராசு.

 
m
 

"மீன்கொடி" கோவிந்தராசு அவர்களது மற்ற படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.