........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:141

ஒரு கருவின் கடைசிகீதம்.

உன் முகம்
காண நினைத்தேன்
முடியவில்லை!

உன்னை நேசிக்க
நினைத்தேன் அதுவும்
முடியவில்லை!

உன் விரல் பிடித்து
விளையாட நினைத்தேன்
நடக்கவில்லை!

பட்டாம் பூச்சியாய்
உலகத்தை சுற்றிவர
ஆசைப்பட்டேன்
நடக்கவில்லை!

உன் ஒருத்தியை
மட்டுமே என்
ஜீவன் சுவாசித்துக்
கொண்டிருந்ததே...

அம்மா... ...என் ஆசைகள்
அனைத்தும் நடந்திருக்கும்!

என் எண்ணத்தையும்
என்னையும்
கருவினில் கரைக்க...
இந்த மருத்துவமனைக்கு
நீ வராமலிருந்திருந்தால்... ...!

-த.சத்யா, இராஜபாளையம்.

 
m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.