........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:182

தமிழர் புத்தாண்டில்.. .. ..

தை மகளுடன் 
கை கோர்த்துத்
தமிழ் காண்கின்ற 
முதல் பிறந்தநாள்.

வியர்வையை முத்தாக்கி
விளைச்சலைக் கண்டவனுக்கு
மண்ணைப் பொன்னாக்க
மணியைத் தரும் நாள்.

பொங்கலுடன் சேர்ந்து இனித்
தேன்சுவைத் தமிழும் பொங்கட்டும்.
சென்ற இடமெல்லாம்
சிகரங்களில் ஏறமுடியாவிட்டாலும்
நகரங்களின் நடைமுறையில்
நாக்குகளில் தவழட்டும்.
அதிலே அசிங்கம் பிடித்தாற்போல
ஆங்கிலம் கலக்காதிருக்கட்டும்.
அறிவியல் வளர்ச்சியை
அதிகமாய்க் கண்டு
பிறமொழிக்கு வார்த்தையின்றி
பெரிதாய்க் கடன்கொடுக்க
ஆழத் தெளிந்து
அகிலத்தில் உயரட்டும்.
-சித. அருணாசலம்,சிங்கப்பூர்.

 
m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.