........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:184

தாய்க்குத் தந்த பரிசு!

முதல் கரு அவளின்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
தாய்மை என்ற
பதவியைக் கொடுக்கப்போகும் ஜீவன்!

தன்னையும் அறியாமல்
அளவில்லா பாசத்தைக் கொடுத்தாள்!
அதுவே தன் உலகமென
கர்வத்தில் மிதந்தாள்!
பலவித கனவோடு 
உன்னை வளர்த்தாள்!

தவழும் போது உன் 
கால்கள் வலிக்குமென்று
பஞ்சுமெத்தையில் தவழச்செய்தாள்!
அம்மா என்று நீ அழைக்க
கோயில் குளம் என்று
ஒன்றையும் விடாமல் சுற்றி வந்தாள்!

விளையாடும் போதும் நீ
முகத்தில் விட்டெரியும் 
பொருள்களை அன்புடன் 
அணைத்துக் கொண்டாள்!
நீ படிக்க 
அவளும் உன்னுடன்
சேர்ந்து படித்தாள்!

நீ உறக்கத்தை பரிசாக 
கொடுக்கும் போதெல்லாம்
உன்னால் அவள்
பல இரவுகளின் தூக்கத்தை 
பரிசாக உனக்குத் தந்தாள்!
நீ செய்யும் ஒவ்வொரு 
செயல்களை ரசித்தாள்!

உன் பிள்ளைகள்
மிதித்து விளையாடும் போது
நீ மிதிப்பதாய் 
நினைத்து சந்தோஷப்பட்டாள்!

உன் இத்தனை
பருவத்தைக் கடந்து 
வந்த அவளின்
60 வயதை கடந்து செல்ல 
உன்னால் முடியாமல்
அவளுக்கு நீ கொடுத்த பரிசுதான்
முதியோர் இல்லமோ?
-த.சத்யா, இராஜபாளையம்.

 
m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.