........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:192

எனக்கு ஏது கவிஞர் பட்டம்?

பூக்கள் இல்லையென்றால்
வண்டுகளுக்கு ஏது தேன் ?

கற்கள் இல்லையென்றால்
உலகுக்கு ஏது சிற்பங்கள் ?.

கற்பனைகள் இல்லையென்றால்
புத்தகத்துக்கு ஏது படைப்புகள் ?

இருட்டுகள் இல்லையென்றால்
சந்திரனுக்கு ஏது வெளிச்சம்?

கஷ்டங்கள் இல்லையென்றால்
மனிதனுக்கு ஏது அனுபவம்?

பொய்கள் இல்லையென்றால்
வாழ்க்கைக்கு ஏது உண்மை? 

துன்பங்கள் இல்லையென்றால்
உறவுகளுக்கு ஏது இன்பம்? 

புரிந்து கொண்டேன்! காதலியே...!
நன்றாகப் புரிந்து கொண்டேன்!!

நீயே என் மனைவியென்றால்
எனக்கு ஏது கவிஞர் பட்டம்? 

-த.சத்யா, ராஜபாளையம்.

 
m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.