........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:193

மனமுருகி வேண்டுகிறேன்!!

ஊர் நெடுக உன் பாட்டை
என் உளமுருக பாடுகையில்
ஓர் துயரம் எனக்கில்லை- ஓம் முருகா!

உணர்ந்தேனே உன் அருளை
உருவான செந்தமிழே
உனை வேண்டிப் பாடுகிறேன்- ஓம் முருகா

சிவஞானம் பெற்ற மகன்
இந்த சிங்கையிலே குடிகொண்டு செந்தூரமாய் நீ
காவடியும் தேர்வடிவும் கால் நடையாய்
பக்தர் கூட்டம்-ஓம் முருகா!

திருவாளும் மலர் கொண்டு
பூமாலை கட்டி அதை
உன் பூ பாதம் வணங்கிடவே
உன் திரு நாமம் போற்றுகிறேன்
உன் திருவருள் கிடைத்திடவே -ஓம் முருகா

நெற்றியிலே நீ பிறந்தாய்
நெறி தவறா குமரனே!
தமிழ் செப்புடையோர் வாழ்கின்ற
இந்த சிங்கையும் ஒரு படைவீடே -ஓம் முருகா!

நூறு படை வந்தாலும்
ஆறு படை போதுமடா
ஆறுமுகம் வேலெடுத்தால்
நூறு முகம் வீழுமடா -ஓம் முருகா!

மலர் கொண்டு தூவிட்டு
மனமுருகி வேண்டுகிறேன் -ஓம் முருகா! 

-வி.கண்ணன், மகிபை.

 
m

 

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.