........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 208

தமிழ்மகள் குடிபுகுந்தாள்

செவ்வாயில் ஓர் புன்னகை
செந்தமிழில் ஒர் சொல்நகை
செங்கழுத்தில் பொன்னகை

கடைக்கண்ணில் ஓர் மின்னல்
கைதன்னில் பனிக் குளிர்மை
கருவிழியில் வாட் கூர்மை

இல்லாத இடை கொண்டு
இதயத்தை ஆட் கொண்டு
இப்பொழுதைத் தனதாக்கி

மென்மையிலே தென்றல் போல்
மேகத்தின் குழந்தை போல்
மோகத்திலே தவிக்க விட்டு

கருத்தினிலே கவிதை போல்
காதலிலே காவியம் போல்
கனவுகளில் சுந்தரி போல்

தாகத்திற்கு குளிர்மோர் போல்
தவிக்கின்ற நெஞ்சினுள்ளே
தமிழ்மகள் தான் குடிபுகுந்தாள். 

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 
m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.