........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 209

மனிதனின் கையில் கட்டுப்பாடு! 

மரம் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்
காற்று விடுவதாயில்லை.
மழை அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்
மேகம் விடுவதாயில்லை.
மனம் அமைதியைத்தான் விரும்புகிறது - ஆனால்
ஆசை விடுவதாக இல்லை.
காதல் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்
காமம் விடுவதாயில்லை.

மேகத்தையும், காற்றையும்
வேகத்தைக் கட்டுப்படுத்தச் சொல்ல முடியுமா?
ஆசையையும், காமத்தையும்
அளவாக்கிக் கொள்ளலாம் அல்லவா?
நிறைவாக ஒன்று இருக்கும் போது - அதில்
குறை சேர்வதற்கு மற்றது அவசியமா?

இவற்றையெல்லாம் இணைத்திருப்பது
இறைவன் படைப்போ - இல்லை
இயற்கையின் நியதியோ?
கட்டுப்பாடு என்பது
மனிதனின் கையில் - அதுவும்
மனதின் கையில் மட்டும்.

-சித. அருணாசலம், சிங்கப்பூர்.
 

 
m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.