........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 210

மனம் அடங்காது ஏனோ? 

பத்து ரூபாய் தோசைக்கு
முப்பதும்,
பதினைந்து ரூபாய் பழச்சாறுக்கு
நாற்பதும்
கொடுத்ததோடு
பகட்டுக்காக
டிப்ஸ் வேறு கொடுத்து...

வாசல்முன் வந்து நிற்கும்
காய்கறிகாரனிடமும்
அறுந்துபோன செருப்பைத்
தைத்துக் கொடுப்பவனிடமும்

இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ?

-உழவன்.
 

 
m

 

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.