........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 211

நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்

நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்
நேசத்தோடு கூடும் நேரம்
நினைவலைகளில் பயணிக்கும்
கனவுக்கப்பல் கரையேறும்

தேன் சிந்தும் வானம் அங்கே
தெளிவாகும் மெய் ஞானம்
மலர் வீசும் சுகந்தவாடை
மனம் கொள்ளும் ஆன்ம நிலை

கணநேரம் மூடும் விழிகள்
காணுவதோ அழியாக் கோலம்
கண்கள் இருந்தும் காண்பதில்லை
காலமிட்ட கோலம் தன்னை

திரையரங்கில் அரங்கேறும்
தினம் தினமும் நாடகங்கள்
திரைச்சீலை விழுந்த பின்னும்
தொடரும் கதை அறிவாரோ

இதயமென்னும் காகிதக்கப்பல்
ஏற்றுவதோ இரும்புச்சுமை
மறுகரையைச் சேருமுன்னே
மூழ்கிடுவதே உண்மையன்றோ

வரும்போதும் எதுவுமில்லை
விழும்போதும் ஏதுமில்லை
இடையில் வரும் உடமைகள்
இதுக்குத்தானா யுத்தங்கள்

ரத்த ஓட்டம் தளர்ந்ததுமே
புத்தி கொஞ்சம் விரியுதப்பா
முத்தியடையும் வேளைதேடி
சித்தமெல்லாம் தெளியுதப்பா!

-சக்தி சக்திதாசன், லண்டன்.
 

 
m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.