........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 235

பூவாகப் பிறக்க வேண்டும்!

 

விடிகாலைக் கதிரவன்
உறக்கம் கலைத்து
எழும் முன்பே,
எழுந்து நீராடி
ஆடையுடுத்தி ஈரம்
காயாக்கூந்தலை
அள்ளி முடிந்து,
நடுநெற்றியில்
குங்குமமிட்டு,
பூப்பறித்து அன்னம்போல்
நடை நடந்து
பக்தியோடு இருகரம் கூப்பி
பூஜை செய்து பூச்சூடி
சுற்றிச் செல்வாள்
துளசி மாடத்தை...

பொறாமை கொள்ளும்
துளசி தன்னை தானே
நொந்துகொள்ளும்
அடுத்த பிறப்பிலாவது
பேரழகி அவள் தலையில்
சூடிய பூவாய்ப்
பிறக்கவேண்டி...!

-ராம்ப்ரசாத்.

 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.