........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 245

எல்லாம் உண்டு! ஆனால்...

தாயுண்டு தந்தையுண்டு தவம் செய்து பெற்றதுண்டு
தலை வாழை இலை போட தங்கையர்கள் சிலருண்டு

தேனுண்டு திணையுண்டு தெவிட்டாத சுவையுண்டு
திண்ணையோரம் வஞ்சியவள் பேசுகின்ற தமிழுண்டு

உதவிக்குக் கரமுண்டு உழைப்பிற்கு தேகமுண்டு
பதவிகள் பலவுண்டு பஞ்சுமெத்தை துயிலுண்டு

காலமுண்டு நேரமுண்டு கல்வி தந்த பாடசாலையுண்டு
காளையரைக் கவிஞனாக்கி கன்னியர் செல்வதுண்டு

ஆடலுண்டு பாடலுண்டு அத்தனையும் சுகமுண்டு
அசைகின்ற புல்தந்த இசைகூட அங்குண்டு

உடலுண்டு உயிருண்டு உண்மையாக நானில்லை...
கடல்கடந்து வந்து விட்டேன் கண்டறிவார் யாருமுண்டா...?

-கலை, கலிபோர்னியா.

 

 

 

 

 

m

 

கலை அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.