........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 246

இதயத்தைத் திருடிவிட்டு...

உன்னை
பார்த்த கண்கள்
வேறெதும் பார்ப்பதில்லை!
உன்னை
நினைத்த நெஞ்சும்
வேறொருத்தியை மறந்தும்
நினைப்பதில்லை!

என் இதயம்
உன் வசிப்பிடம்!
என் உயிர்
உன் வாழ்விடம்!
என் ஜீவன்
உன் இருப்பிடம்!

ஏனோ தெரியவில்லை...
உன்னுடன்
பேசும்போது மட்டும்
வார்த்தைகள் வெட்கப்படுவதில்லை!

எனக்குள்
பொறாமையும் உண்டு...
நீ நேசிக்கும் உயிர்
நான்
ஒருவனாக மட்டுமே
இருக்க வேண்டுமென்று...

இதயத்தை திருடிவிட்டு
இதயமே இல்லாமல்
இருந்தால் எப்படி?
மறந்தாலும்
மறைந்தாலும்
என் இதயத்தில்
நீ மட்டுமே வாழ முடியும்.

--த.சத்யா , இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.