........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 253

இன்றோடு விட்டுவிடு!

இயற்கை அன்னையின் படைப்புகள்
இதில்தான் எத்தனை சிறப்புகள்..!

விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கும்
மா மலைகள்!
வானத்துக்குப் வண்ணப்
பட்டாடை உடுத்தும்
வான வில்கள்!

மணம் கொண்ட பூக்களின்
வாசத்தை தன்னுடன்
பூவுலகில் அனைவருக்கும்
அள்ளித்தரும்
அற்புதமான காற்று!

மாலை நேரத்து மஞ்சள் வெயில்
மயக்கம் தரும் சுகமான சுகம்!
வானத்தை தொட்டு விடலாம்
என்ற எண்ணத்தில்
வட்டமிடும் பறவையினங்கள்!

குளத்தில் குளிக்கலாம்
குமரிக் கடலை ரசிக்கலாம்
இயற்கை அன்னையின் கொடை!
இன்னும் எத்தனை எத்தனையோ

மனிதனே!
இந்த இயற்கையளிக்கும்
பலன்களை விட்டுவிட்டு
செயற்கையாய் நீ மகிழ
இயற்கையை அழிப்பதை
இன்றோடு விட்டுவிடு!

-மு.சந்திரசேகர், இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.