........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 254

இல்லையென்றால் ஏது?

மொட்டுக்கள் மலரவில்லையென்றால்
வண்டுகளுக்கு ஏது தேன்?
கற்கள் இல்லையென்றால்
சிற்பங்கள் ஏது உலகில்?

கற்பனைகள் இல்லையென்றால்
கதை கவிதைகள் ஏது புத்தகத்தில்?
இரவு இல்லையென்றால்
பகல் ஏது நடைமுறையில்?

கஷ்டங்கள் இல்லையென்றால்
அனுபவம் ஏது மனிதனிடத்தில்?
பொய் இல்லையென்றால்
நிஜம் ஏது வாழ்க்கையில்?

துன்பம் இல்லையென்றால்
இன்பம் ஏது உறவுகளில்?
நானும் நீயும் பார்க்காமலிருந்தால்
நட்பு ஏது நம்மிடத்தில்?

புரிந்து கொண்டேன்!
உன் நட்பை -இனி
பிரிவு ஏதும் இல்லை நம்மிடத்தில்

-த.சத்யா, ராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.