........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 273

காதலுக்கு அருமருந்தாய்...!

 

நெஞ்சமெனும் வானத்தில்
எண்ணமெனும் தூரிகையால்
வர்ணம் தீட்டிய வானவில்லாய்
விளைந்து நின்ற பொன்மயிலே!

உள்ளமென்னும் தடாகத்தில்
வெள்ளமான அன்பினிலே
மலர்ந்து நின்ற தாமரையாய்
மிதந்த வண்ணப் பூங்கொடியே!

பசுமையான இதயத்தினுள்ளே
பயிராய் வளர்ந்த காதலுக்கு
மழையாய் உந்தன் புன்னகையால்
உயிரைத் தந்த மான்விழியே!

விரும்பாக் குணங்கள் மலிந்த
இதயம் இரும்பாய் ஆனவரிடையே
கரும்பாய் இனிக்கும் காதலுக்கு
அருமருந்தாய்ச் சுரந்த கன்னியே!

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

       முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.