........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 275

மனிதன் மட்டும்...?

 

ஓ! மனிதா!!
மரங்களும்
செடிகளும்
உன்னைப் பார்க்கும்போது
என்ன நினைக்கின்றன
என்று எண்ணிப் பார்த்திருப்பாயா?

கடலும்
குளங்களும்
ஆறுகளும்
உன்னை அறிந்திருக்கவில்லை
என்றா நினைக்கிறாய்?

அதுதானில்லை!
உலகில் நாம் காண்பவற்றில்
மனிதன் மட்டுமே
தன்னைப் பற்றி
விளம்பரம் செய்து கொள்கிறான்!

ஆனால்
மற்றவர்கள் மத்தியில்
அவன் எவ்வாறு உள்ளான்
என்பது பற்றி
அவனுக்கு அக்கறையே கிடையாதாம்!

கடலும் குளமும் ஆறுகளும்
தங்களுக்குத்தான்
அதிக பொறுப்புகளும்
உதவும் தன்மைகளும்
உள்ளதாக நினைக்கின்றன!

மரமும் செடிகளும் கொடிகளும்
தங்களால்தான்
உயிர்கள் வாழ்கின்றன
என்று நினைக்கின்றன!

ஆனால் மனிதன் மட்டும்
தன் சொந்த இனத்துக்கே
வாழ்வளிக்க விரும்பாத
ஒரு விந்தையான
உயிரினம் என்றுதான்
அவை நினைக்கின்றன.

மனிதனாகத்
தாங்கள் பிறக்கவில்லை
என்று அவை
பூரித்து மகிழ்கின்றன.
மனிதன்தான் இன்னும்
மனிதனாக வாழவே
கற்றிருக்கவில்லையே!

-செ.ப.பன்னீர்செல்வம், சிங்கப்பூர்.
 

 

 

 

 

 

m

 

       முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.