........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 285

அம்மாவுக்குத் துணையாய்...

 

அம்மா!
இந்த மூன்று எழுத்து
தரும் சுகம் தனிதான்!
பாசப் பிணைப்புகளிலே
வலுவான பாசம்-ஒரு
குழந்தைக்கும் தாய்க்கும்
இருக்கும் பாசம் தான்!!
பிள்ளை தாயிடம்
வைத்திருக்கும் பாசத்தை விட
தாய் பிள்ளையிடம்
வைத்திருக்கும் பாசம்
பலமடங்கு அதிகம்தான்!

குழந்தையைச் சுமக்கும்
கர்ப்பகாலத்தில் அவள்படும்
அவஸ்தைகள்தான்
எத்தனை எத்தனை?
தன்னுயிரே போனாலும்
தன் குழந்தை இந்த
உலகத்தில் பிறக்க
மறுபிறப்பு எடுக்கிறாள் அவள்!
தாய்மொழி அறியாத
பருவத்தில் நம் மழலை
மொழி அறிந்தவள் அவள்!
நம் சுகதுக்கங்களை
சுமக்கும் வாகனம் அவள்!
எதுவுமே தெரியாத
நம் மழலை பருவத்தில்
கற்றுக்கொடுக்கும்
ஆசான் அவள்!
உறவுகளே தெரியாத
நமக்கு உறவுகளை
அறிமுகப்படுத்தும் முதல்
உறவும் அவள்!
நம் வாழ்க்கையின்
ஆணிவேரும் அவளே!!

நம் விழியோரம்
சிறுதுளி நீர்வழிந்தாலும்
அவளால் தாங்கமுடிவதில்லை
அவள் நமக்காக
வாழ்ந்த வாழ்க்கையில்
ஒருசிறு பகுதியாவது நாம்
அவளுக்காக வாழ்வோம்!
தாய்க்கும் நிகரான
எதுவும் இவ்வுலகில் இல்லை.
என்பதை உணர்ந்து
முதுமைப் பருவத்திலாவது
அவளுக்குத் துணையாய்
நாமிருப்போம்!!

-த.சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.