........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 330

மனிதத்தைத் தேடி...!

 

மாயை மேகம் மூடிக்கிடக்க
இருளை விரட்டப்
பரிதியில்லை!

அலாரம் நெஞ்சிலடித்துப் பூபாளம் பாடிட
காலையை எழுப்பிவிடக்
சேவலில்லை!

கோப்பி போட மனைவியில்லை!
கோப்பி மெசினுடன்
சண்டையும் இல்லை!
சீனி குறையக் கூட என்ற
சிணுங்கலில்லை!

மனைவியல்லையாதலால்
பிள்ளையில்லை!
பிள்ளைகளின் தொல்லையில்லை!
மூத்தோர் மனைகளிருப்பதனால்
பிள்ளைகள் தேவையில்லை!

பெண் பொம்மைகள்
சொன்னபடி செய்வதால்
கட்டிலைப் பங்குபோடப்
பெண்ணில்லை!
பெண்மையில்லை!!

பெண்ணின்றிப் போனதாலே
சண்டையில்லை!
சண்டையில்லாக் காரணத்தால்
சரசமில்லை!

இன்டெர்நெட்டில் உணவு வருவதால்
சமையலில்லை!
சமையலறையில்லை!!
சமையலறை இல்லாததால்
செலவில்லை!
உணவு மணமில்லை!!

இன்டெர்நெட்டில் சேட் இருக்க
பேசத் தேவையில்லை!
பேசுவதால் வருகிற பிரச்சனை
ஏதுமில்லை!
பேசுவதற்கும் வீட்டில்
மனிதரில்லை!!
மனிதரிலில்லாததால் மனத்தில்
வேதனையில்லை!!

தொலைக்காட்சி, தொலைபேசி என்று
வாழ்வு தொலைந்து கிடப்பதனால்
தேவைக்கு மனிதனைச் சுற்றி
மனிதர் தேவையில்லை!

இல்லை இல்லை இல்லை....!
மனிதனைச் சுற்றி மனிதரில்லை
மனிதனே இல்லா உலகில்
மனிதத்தை எங்கு தேடுவது?

-நோர்வே நக்கீரா. 

 

 

 

 

 

m

 

நோர்வே நக்கீரா அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.