........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 333

தீபாவளி திருநாளை...!

 

கொண்டாடுவோம்
கொண்டாடி மகிழ்வோம்
நாடு போற்றும் திருநாளாம்
தீபாவளி திருநாளை
பாரெல்லாம்
பட்டாசை கொளுத்தி
கொண்டாடி மகிழ்வோம்
தீபாவளி திருநாளை...!

ஈரேழு வருடம்
வனவாசம் சென்று
ராவணனைக் கொன்று
மக்களைக் காத்த
ராமனை நினைத்து
மின் விளக்குகள் மின்ன
கொண்டாடி மகிழ்வோம்
தீபாவளி திருநாளை...!

நரகாசுரனை வதம் செய்து
உலக நலம் காத்த
பகவான் கிருஷ்ணனை
போற்றிக்
கொண்டாடி மகிழ்வோம்
தீபாவளி திருநாளை...!

சிவன் சக்தியை
உடம்பில் சரிபாதியாய்
ஏற்று மகிழ்ந்த திருநாளாம்
தீபாவளி திருநாளை...!
கொண்டாடி மகிழ்வோம்

நாம் அனைவரும்
ஒற்றுமையாய்
உலகம் வியக்கும் வண்ணம்
சாதி மத பேதமில்லாமல்
அனைவரும் கொண்டாடி
மகிழ்வோம்
தீபாவளி திருநாளை...!

-த.சத்யா, இராஜபாளையம். 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.