........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:35

கடைசிவரை...

உன்னை என் உதடுகள்
ஒவ்வொரு
முறையும் முத்தமிட்ட போது,
மொத்தமாய் இன்பம்
என எண்ணினேன்!

நான் உன்னைச்
சுவைக்கும்
ஒவ்வொரு முறையும் நீ,
என் கண் முன்னே
உதிர்த்த சாம்பல்....
நீயும்
இப்படித்தான்
சாம்பலாகப் போகிறாய்
என்றுணர்த்தினாய்!

நான் தான்
அதை உணராது போனேன்!?
இழுக்க இழுக்க இன்பம் தானே
என்றுதான் எண்ணினேன்...

இழுக்க இழுக்க
என் ஆயுளைக்
குறைத்துக் கொண்டிருக்கிறாய்
என்பதை
அறியாமற் போனேன்!?

என் விரல்கள்
சுட்டபோது கூட
உன்னைப் பிரிய
மனமில்லாதிருந்தேன்..."

நீ "விரைவில்
சுடுகாட்டில்
சுட்டெரிக்கப்படுவாய்
என்றுணர்த்தினாய்
என்பதை
மட்டும்
கடைசிவரை நான்
அறிந்திருக்கவே இல்லை...

 -ஆல்பர்ட், அமெரிக்கா.

 

 

m

 

ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.