........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 353

உழவன்!

அதிகாலை கதிரவனைப்
பார்த்ததும் தாமரையை
முந்திக்கொண்டு மலர்கிறான்
உழவன்...!

பூமிப்பெண்ணின் காதும‌ட‌ல்க‌ளில்
இவ‌ன் வைக்க‌த்துடிக்கும்
அத்த‌னைப் பூக்க‌ளும்
தானிய‌ங்க‌ள்...!

உப்புக்க‌ரிக்கும்
விய‌ர்வை சிந்தி
செப்புக்க‌ல‌க்காத‌
த‌ங்க‌ம் வார்க்கிறான்
நெற்கதிர்களாய்...!

பெண்ணின் விதையில்
உயிரையும்
மண்ணின் விதையில்
பயிரையும்
விளைவிக்கும் வித்தை
கற்றவன்...!

பழைய சோறு தானுண்டு
பாஸ்மதி உலகுக்கு
தருபவன்...!

ஏர் பிடித்து
போரடித்து
கலன்களில் நெல் தேக்கி
பலன்களை உலகிற்களிப்பவன்...!

விண்ணை நம்பி
வாழ்க்கையும்
ம‌ண்ணை ந‌ம்பி
பிழைப்பையும்
கொண்ட‌வ‌ன்...!

உழுத‌ நில‌த்தில்
பூமி மாதாவின்
முன் நெற்றியில் விழுந்த‌
க‌ற்றை முடியின் சாய‌ல்
உண‌ர்ப‌வ‌ன்... !

வெள்ளத்தில் வழியுமவன்
க‌ண்ணீர், அத‌னை
ம‌ழை நீராலும்‌
ம‌றைக்க‌ இய‌லாது...!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.