........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 355

அது காதல் தானென்று...!

மொழி ப‌யின்ற‌தென்ன‌வோ
உன் இத‌ழ்க‌ள்தான்
எனினும்
அதிக‌ம் பேசுவ‌தென்ன‌வோ
உன் விழிக‌ளே...
ஆனால்,
இப்ப‌டி காத‌ல் பேச‌
யாரிட‌ம் க‌ற்ற‌ன‌ அவைக‌ள்
என‌க்கேட்டால் என்னையே
காரணம் காட்டுகிறாய்...

மழைக்காகத்தான் குடைகள்...
எனினும்,
உன் மடியில்
நான் சாய‌
இமைக்குடை விரிக்கும்
உன்னிரு கருமீன்களின்
க‌ருணைப்பார்வையில்
எப்போதும் என் கண்களில்
மழைதான்...

இனியவளே...
நீ பேசப்பேச‌
திகட்டாமல் இனிக்கிறது
எந்த மொழியும்...
புரியாத மொழியில்
நீ என்ன பேசினாலும்
எனக்குப் புரிகிறது
அது காதல் தானென்று...!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.