........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 362

தனிமையின் நர்த்தனம்..!

நான்கு சுவற்றுக்குள்
என்னை சிறை வைத்திருந்தது
தனிமை...

எனக்கான நேரத்தை
ஒவ்வொன்றாய் பிடித்து
தூக்கிலிட்டுக் கொண்டிருந்த‌து
ஒரு கைதேர்ந்த
கொலைகார‌ன் போல‌...

ஆள் அர‌வ‌ம‌ற்ற‌ பாழ‌டைந்த‌
வீட்டில் ந‌டுநிசியில்
ச‌த்த‌மாய் இடித்துக் கொள்ளும்
மூடாத‌ க‌த‌வுக‌ள் போல‌,
ப‌ல‌மாய் இடித்துக் கொள்கிற‌து
என் நினைவுக் க‌த‌வுக‌ள்,
இனி நினைத்துப்பார்க்கத்
தேவை ஏதும் இல்லை
என்ற‌ போதிலும், நான் ம‌றந்தாலும்‌
என்னை ம‌ற‌க்காத‌
க‌ட‌ந்த‌கால‌ நிகழ்வுகளால்...

பழக்கப்பட்ட செய்கைகளுக்கான‌
காரணங்கள் தொலைந்து விட்ட‌
நிலையில் கலிநர்த்தனம் புரியும்
தனிமையை பேரமைதி ஒன்று
உற்று நோக்குகிறது அர்த்தமுடன்...!

-ராம்ப்ரசாத்.

 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.