........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 368

நிர்வாணம்!

மெர்க்குரி விளக்கொளியில்
மேற்கு தேசமொன்றின்
ஒளிமங்கிய மாலையில்
புழுக்கத்தையும் குளிரையும்
தடுத்துப் பிரித்திருந்த‌
ஜன்னலினூடே பார்த்திருந்தேன்...

மழை பொழிவதாய் நினைத்து
அள்ளி அள்ளிப் பனியைப்
பொழிந்து கொண்டிருந்தது
வானம் தவறுதலாய்...

நீர்ப்பசை உலர்ந்துவிட்ட‌
நிலையில் தாகம் தணிக்கமுடியாமல்
காய்ந்துவிட்ட இலை உடைகள்
காற்றோடு பறந்து போயிருந்தன...

மானத்தை மறைக்க‌
உடைகள் ஏதுமின்றி
நிர்வாணமாய் நின்றது
அந்த தனி மரம்...!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.