........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:38

ஹைக்கூ கவிதைகள்

விழியருவிகள்
பிரியும் உறவுகள்
பன்னாட்டு விமான நிலையம்!

________________

வசந்தம் தேடிகளின் கண்ணீர்
வளைகுடாவில்.....
அருவிகள்!

________________

ஈரமில்லா ஆறுகள்
இரக்கமில்லா மனிதர்கள்
மணல் கொள்ளை!

________________

ஆண் பெண் சமத்துவம்
தாய்ப்பால் ஆணுக்கு
கள்ளிப்பால் பெண்ணுக்கு.

________________

முகவிலாசம்
கிறுக்கிக் கிடந்தன
வறுமைக் கோடுகள்!

________________

குற்றவாளி வெளியில்
நிரபராதி சிறையில்
நீதிக்குத் தண்டனை!

________________

சாலையில் கிடக்கிறது
சல்லி சல்லியாய்.....
மலையின் ஆணவம்!

________________

உயர்ந்தவன் நீ!
யார் வைத்த ஐஸ்?
இமயம்!

________________

வாழ்த்தும்
வசைபாடும்

எச்சில் வாய்!

_________________

கையில் குடம்
கண்ணில் நீர்
மரம் வெட்டிக்கும்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

 

 

 

 

 

 

m
 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.