........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:39

குட்டி தேவதை

புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே - என்
அகம் தொட எத்தனிக்கிறாள்...

எப்படியும் முடிகிறது - அவளின்
உலகத்தினுள் எனைக் கடத்த
ஜன்னல் வெளி பேசுகிறாள்...

பறந்து சென்ற பறவைக்காக
அவள் சொன்ன கதைகளையெல்லாம்
டெடிபீர் பொம்மைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ...?

முகத்தைச் சுழித்து
நாக்கைத் துருத்தி
அவளுக்கான சில்மிசங்கள்
வெறுமையை ஆக்கிரமிக்கிறது...

பொம்மையைத் தட்டிக் கொடுத்து
கண்ணயரச் செய்த பின்னே
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்...

அவளுக்கான உலகில்
எண்ணற்ற ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன...

எப்போதாவது ஒன்றுதான்
என்னால் தோண்டியெடுக்கப் படுகிறது.

-பாண்டித்துரை, சிங்கப்பூர்.         

 

 

m
 

பாண்டித்துரை அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.