........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:40

என்று தணியும்....

மதிநுட்பத்தால் வந்தது
மதிப்பெண்
அது ஒரு
மந்திரக்கோல்.

அந்த
மந்திரக்கோலை
வைத்துக்கொண்டு
எதை வேண்டுமானாலும்
சாதிக்கலாம்.

சொன்னார்கள் பலர்....
எத்தனை
பைத்தியக்காரத்தனம்....?

பணத்தால்
அந்த மந்திரங்கள்
சூறையாடப்படுகின்றன.

வெற்றுக்கோலால்
எந்த சாம்ராஜ்யத்தை
கோலோச்சுவது?

மேகங்களுக்கும்
மதிப்பெண்களுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு.

மழையை தன்னுள் கொண்ட
மேகங்களே
மக்களால் போற்றப்படும்.

பணத்தை தன்னுள் கொள்ளாத
மதிப்பெண்களோ
தூற்றப்படும்.

பணம் என்று ஒன்று
கையில் உண்டேல்
அதன் பொருட்டு
எல்லோர்க்கும்
கிடைக்கும் கல்வி.

நல்லவேளை...
இல்லை இங்கே
ஒளவை.

கனவு கான்போம் -
கற்பனையிலேயே
கல்வியைக்
கற்போம் என்று!

பணத்தைக் கொடுக்காத
இறைவன்
கற்பனைகளையாவது
வற்றிப் போகாமல்
கொடுக்கட்டும்!

தானம் -
நலிந்து விட்ட
உணர்வுகளுக்கு
வழங்கப்படும்
உற்சாகம்!

ரத்தம் ''தானம்''
செய்யப்படுகிறது.
கண் ''தானம்''
செய்யப்படுகிறது.
உணவு ''தானம்''
செய்யப்படுகிறது.

கல்வியை ''தானம்''
செய்ய வேண்டாம்.
தயவு செய்து
''தனம்'' ஆக்காதீர்கள்!

இவை
தூக்குக் கயிற்றின் முன்
நிற்கும் அவனின்
கடைசி நிமிட
எண்ண ஓட்டங்கள்

கலைமகள்
காலண்டரில்
காட்சியளிக்கிறாள்...
கறுப்புப் பணத்தால்
அலங்கரிக்கப்பட்டு...
வெள்ளைத் திருமகளாய்...

கயிற்றின்
வட்டத்துக்குள்ளிருந்து
தெரியும் முகத்தில்
பிதுங்கி வெளிப்படும்
அவனுடைய
கண்கள்...
கல்வி விடுதலையின்
தீப்பிழம்பாய்!

என்று தணியும்.... ?

-திரு.

 

 

 

 

m
 

திரு. அவர்களது இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.