........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 390

என் அன்புக் காதலா...!

பாலொளி வீசி
முழும‌தி உலா வ‌ர‌
அவ்வொளியை பிரதிப‌லித்து
அந்தி ம‌ல்லிக‌ள்
ம‌ண‌ம் வீச‌
சில்லெனத் தென்ற‌ல்
ம‌ர‌ இலைக‌ளில்
இசை மீட்ட‌
வெண்ம‌தி த‌ன் முக‌ம்
பார்க்க‌த் தோதாக‌
ச‌ல‌ன‌மின்றி ஓடிய‌
நீரோடையில்
ஆங்காங்கே துள்ளிக்
குதித்த‌ மீன்க‌ளுமாக‌
இய‌ற்கை அழ‌கெல்லாம்
கொட்டிக் கிட‌ந்த‌
அந்த‌ இர‌வையும்
ர‌சிக்காது
வாடி நின்றேன்
அழ‌கா உன் வ‌ருகைக்காக‌
நீ இல்லா இட‌த்தில்
அமுத‌மும் க‌ச‌க்கின்ற‌ போது
இவையெல்லாம் எம்மாத்திர‌ம்..!

- பிரதீபா, புதுச்சேரி.

 

 

 

 

 

m

 

பிரதீபா அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.