........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 42

சிற்பி!

மனதில் ஒளிர்ந்ததை
நினைவில் ஒழுங்கிடுவாய்...!

சலனமற்ற நீரோடையின்
ஓட்டமாய் உன் தழுவல்கள்...

விரல்களில் விருந்தாளியின்
உன்னதத்தை உணர்ந்திட்டாய்...!

ஆத்திகத்தின் ஆணிவேரை
அவதரிக்கச் செய்திட்டாய்...!

உன்னால் மட்டும் முடிகிறது
ஒழுங்கற்றதை ஓவியமாக்க...

மனவிழியில் சிற்பம்
நிலைத்திருக்க...

தேவையற்றன சிதறடிப்பாய்...

கணநேர வேண்டுதலில்
ஓயாத எண்ண அலைகள்,
சில நொடியும் பிசகாத
சிந்தையினை கொணர்ந்திட்டாய்...!

கடுந்தவம் செய்திட்டும்
கண்டிராத உண்மைதனை-உன்
கலை நயத்தில் எமை மறந்து
கண்டுணர்ந்தேன் உண்மையிலே...!!

-கோட்டை பிரபு.            

 

 

m
 

கோட்டை பிரபு அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.