........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:44

தனிக் குடித்தனம்

பொருள்
சேர்க்கும் நோக்கில்
பந்த பாசங்களைத்
தொலைத்து விட்டு
நிம்மதி இன்றி
அலைந்து கொண்டிருப்பவர்கள்!

கூட்டுக் குடும்பம்
பிரச்சினை யென
ஓடி ஒளிந்து
இன்று தாமே
பிரச்சினையாகி விட்டவர்கள்!

இன்றைய இளைஞர்களிடம்
நிலவும்
ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு
தம்மை அறியாமலேயே
காரணமாகி விட்டவர்கள்!

சொத்துக்கள் செல்வங்களை
சொந்தமாக்கிக் கொண்டு
பந்த பாசங்களிடமிருந்து
வெகுதூரம்
சென்று விட்டவர்கள்!

பாவம் இவர்கள்!
அன்னை தந்தையையும்
உடன் பிறப்புகளையும்
ஒதுக்கி விட்டு
ஆன்மீகத்தில்
அமைதியைத் தேடிடும்
பரிதாபத்துக்குரியவர்கள்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

 

 

m
 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.