........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:45

பாண்டித்துரை கவிதைகள்

இடம் அறிந்தும் பயணம்...

காலையின் அவசரத்தில்
யார் யாரோ
பயணப்படுகிறார்கள்
அவர்களுக்கான
இடத்தை அறிந்திருந்தும் 
 

புறக்கணிப்பு

நீ கூட
என்னை புறக்கணித்து
செல்கிறாய்...
ரொட்டித்துண்டுக்கு
ஆசைப்பட்டு.

சொல்லாமலே...

மௌனமான நானும்
மௌனமான நீயும்
மௌனித்ததாலே...
உனதான திருமணமும்
எனதான திருமணமும்
சொல்லிக் கொள்ளாமல்
நடந்தேறியது

சாலைக் கனவு

கையேந்தும்
சிறுமியைக் கடந்து
சாலை ஓரம் நடந்து
கொண்டிருக்கிறேன்...
எதிர்காலம் பற்றிய
கனவுகளுடன்.

விடியல் ஆரம்பம்

இமைகளைத் திறக்கிறேன்
வெளிச்சப் பிரவாகம்
முழுமையாக ஆக்கிரமிக்கிறது
என் கண்களிலிருந்து ஆரம்பமாகிறது
எனக்கான விடியல்!

தனிமையும் அழுகையும்

சில நேரங்களில்
யாருக்காகவும் என்னை
விட்டுத்தர விரும்புவதில்லை
என் தனிமையையும்
அதன் மீதான அழுகையையும்
இரவிற்கு அப்பாலும்...

காலம் கடந்த காலம்

புத்தகத்தின் பக்கத்தை
புரட்டிக்கொண்டு
திண்ணையில் முதியவர்.
கீரிச்சிடும் கேட்டின்
ஒலியையும் கடந்து...

வலியுடன் பயணம்

ஒவ்வொருமுறை
எழும் போதும்
இட்டுக்கொள்கிறேன்
வலியுடன் தொடர்கிறது
என் பயணம்.

-பாண்டித்துரை, சிங்கப்பூர்.

 

 

m
 

பாண்டித்துரை அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.