........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:46

பயணம்

ஊரில் இருக்கும்
அம்மாவை நலம் விசாரித்து
ஞாபகமாய்
முனிஸ்வரன் கோவில்
சென்று வருகிறேன்
எதிர்படும் குளம்
இளுச்சை புளியும்
நலம் விசாரித்துச் செல்கிறது
கோகிலாவின் வீடு பூட்டிக் கிடக்க
வேம்புவின் வாசனை
கிட்டிப்புல் அடிபடும் சப்தத்தையும்
மௌனமாகக் கடந்து செல்ல
பள்ளிக்கூடத் திடலை நோக்கி
மாலை நேரத்தில் பயணப்பட
இருப்பற்ற மனம் அமைதியாகிறது.
கண்களின் தழும்பலுடன்
தொலைபேசி அழைப்பு வர
மீட்டெடுக்கப் படுகிறேன்
அலுவலகப் பணிக்கு...

-நீ “தீ”

 

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.