........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:47

ஏமாற்றி விட்டாய்...

அன்பே !
காலைக் கதிரவன்
கண்களில் பட
விழித்தேன் மெத்தையிலிருந்து
விழிமேல் விழிவைத்துப்
பார்த்தேன் உன்
மாடிப் படிகளை...
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
மணிகளாக.
மணிகள் ஒவ்வொன்றும்
பொழுதாக ....
பொழுதுகள் ஒவ்வொன்றும்
நண்பகலாக...
சோர்வுற்றேன் உன்னைக்
காணவில்லை என்று...

கண்கள் அலைபாய
கைகள் பேனாவைத் தேட
எடுத்தேன் பேப்பரை
வரைந்தேன் கவிதையாய்
விரித்த அக்கூந்தலில்
மலர்களைச் சூடி
மல்லிகையாக
செவிகளின் ஓரத்தில்
கருங்கூந்தல் படர்ந்திருக்க
செவ்விதழில் புன்னகையோடு
செந்தாமரைச் சரமாய்...

உன் வருகையை
எதிர் பார்த்த
நான் ஏமாந்து விட்டேன்...
அக்காலை கதிரவனும்
பொறாமை கொள்ள
வந்தாய் பட்டுச்சரிகைகள்
சரசரக்க...

அன்னம் போல் படிகளில்
மெல்ல மெல்ல வந்தாய்
உன் கணவனுடன்
எத்தனை மாற்றங்கள்
ஓரிரு வருடங்களில்
அன்பே
என்னை ஏமாற்றி விட்டாய்...
என்று நினைப்பதா
இல்லை...
இன்னும் என்னுள்
ஆழமாய்ப் புதைந்து விட்டாய்
என்று நினைப்பதா...?

-த.சத்யா,இராஜபாளையம்.       

 

 

 

 

m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.