........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:48

மனமே ! அமைதி கொள்வாய்...

நடந்தவை அனைத்தும்
நேற்றே நடந்தன
நடப்பவை இன்றைய
நடப்பின் எதிரொலி
நாளைகள் வாழ்வின்
நிச்சய வெற்றிகள்
மனமே நீ இன்று
அமைதி கொள்வாய்

கிடைத்தவை எல்லாம்
கேட்டா வந்தவை ?
பிரிந்தவை எல்லாம்
சொல்லியா சென்றவை ?
இருப்பதை இழப்பதும்
இழந்ததைப் பெறுவதும்
இயற்கையின் நியதி
மனமே நீ இன்று
அமைதி கொள்வாய்

சொல்லில் சுத்தம்
செய்கையில் தூய்மை
உயர்வினில் அடக்கம்
தாழ்வினில் பொறுமை
அணிந்த மனதின்
அற்புத மனிதன்
அடைவான் நிம்மதி
மனமே நீ இன்று
அமைதி கொள்வாய்

ஏதோ பிறந்தோம்
ஏனோ வாழ்ந்தோம்
என்பது கொள்கையாய்
எப்படி வாழ்வாய் ?
கிடைத்த பிறவி
அடைந்ததெம் பெருமை
மனிதனாய் வாழ்ந்து
மனிதனாய் மடிவது
ஒன்றே நோக்கமாய்
ஒப்பற்ற பண்புடன்
ஒருமுறை வாழ்ந்துபார்
மனமே நீ இன்று
அமைதி கொள்வாய்.

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.