........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 444

ரயில் சுவடுகள்...!

அந்த ரெயில் பெட்டியில்
என்னைத்தவிர
வேறொருவருமில்லை
தனிமை வாட்டியது... ... ...
எனக்கெதிரே உள்ள
இருக்கையில் அமர்ந்து கொள்ள
யார் வருவாறோ என்ற
ஏக்கத்தில் இருந்தேன்
சிறிது நேரத்தில்
தேவதையாய் நீ வந்தாய்!
ஹலோ! என்று
ஒருவருக்கொருவர்
அறிமுகப்படுத்திக் கொண்டோம்
இருந்தும் என் கண்கள்
உன்னை தீண்டாமல் இல்லை
என் நெஞ்சிற்க்குள்
கவிதைகளும் வராமலில்லை
மின்னல் வேகத்தில்
உன்னை வருணித்தது
என் மனம்...
அம்மா என்ற
உன் குழந்தையின்
சத்தம்!
இடியென இறங்கியது என் செவிகளில்!
உன் கணவனை காண
கண்கள் அலை பாய்ந்தது
என் உள்ளுணர்வு
புரிந்ததோ! என்னவோ!
சட்டென நீ சொன்ன
“அவரில்லை” என்ற வார்த்தை
நெஞ்சை பிளந்தது
சிநேகிதியே!
உன் முகம் மறந்தாலும்!
இன்றும் எந்த பெட்டியில்
இருந்தாலும் நீ!
விட்டு சென்ற சுவடுகள் மட்டும்
என்னை விட்டு
மறையாமல் இருக்கின்றது!

-த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.