........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 467

நல்லோர் வாழும் நாடு.

பஞ்சத்தை விரட்டிய
பாரிஜாத மாந்தர்!
எங்குமே
லஞ்சமற்ற
நற்றொழில் வேந்தர்கள்!

கஞ்சமில்லாக்
கைப்பொருள் கொடுப்போர்!

தூய்மைக்கும்!
வாய்மைக்கும்!
நேர்மைக்கும்!
இலக்கணம் எழுதும்
இன்பபுரி நாயகர்கள்!

உழைப்பின் பெருமையை
உலகிடை உயர்த்திய
உத்தமசீலர்கள்!

இரப்பார் இல்லாப்
பிறர் உழைப்பைச்
சுரப்பார் இல்லாச்
சுதந்திரப் புருடர்கள்!

கறுப்புப் பணத்தில்
குளிப்போரில்லை!
பொறுப்பால் உயர்ந்த
புண்ணிய தேவர்கள்!

சிறப்பால் செழிப்பால்
சீரபெற்ற நல்ல
சிங்கப்பூரியர்
நல்லோர் வாழும் நாடிதுவே!

-முனைவர். தியாகராஜன், சிங்கப்பூர்.
 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.