........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 522

தாயின் தியாகம்...!

தாயே...! உன் தியாகம்
சுமைகளா..?

குழந்தை என்னை
பெயர் சொல்லி
குரல் கொடுத்து
குதூகலப்படுத்தி...

வானுயரத் தூக்கி
வாய்விட்டுச்
சிரிக்க வைத்து...

நான் சிரித்த போது
நீயும் சிரித்து...

நான் அழுதபோது
அருகில் அமர்ந்து
கண்ணீர் துடைத்து
அரவணைத்து
ஆறுதல் படுத்தி..

பயந்த போது
கட்டியணைத்து
முத்தம் தந்து
பயம் நீக்கி..

பசியறிந்து
பாசமாய்
பால் புகட்டி...

தொட்டிலில் இட்டு
தாலாட்டு பாடி
தூங்கச் செய்து..

என் ஜூரத்தால்
உன் உடம்பில்
உஷ்ணம் ஏற..

என் வியாதியால்
உன் தூக்கம் விரயமாக..

என் மலத்தையும்
ஜலத்தையும்
மனம் கோணாது
மாற்றிப் போட்டு..

என் கைப் பிடித்து
தூக்கி நிறுத்தி
கால் பதித்து
தரையில் நடக்க
கற்றுத் தந்து..
நிலாவைக் காட்டி
காகத்தைக் கூப்பிட்டு
கவளச் சோறு ஊட்டி..

இன்ப துன்பத்தில்
ஈடுபட்டு
ஆற்றித் தேற்றி
வளர்த்து ஆளாக்கி
வேலையில் அமர்த்தி
மணமும் முடித்து வைத்த
என் தாயே..!

இன்று நீங்கள்
மேனி கறுத்து
முகம் சுருங்கி
பார்வை மங்கி
செவித்திறன் குறைந்து
பற்கள் விழுந்து
சொற்கள் போய்
கால்கள் சோர்ந்து
நடை தள்ளாடி
ஒரு குழந்தையாய்
என் மேனி சாய்ந்து
என் நிழலில் வாழ
ஏங்கும் உங்களுக்கா
முதியோர் இல்லங்கள்..?

-பாளை. சுசி

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.