........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 545

கனவே சுகம்!

‘அரை ஏக்கர் நிலத்தில்
அரைப் பனை உயரத்தில்
அழகான அடுக்கு மாளிகை...
வாசலில் கூர்க்கா..
புல் வெளியில் தோட்டக்காரன்
அடுக்களையில் சமையற்காரன்
எடுபிடிக்கு வேலையாள்
காருக்கு டிரைவர்..’ - இப்படி

ஒழுகும் ஓலைக் குடிசைக்குள்
ஓட்டை ஓலைப் பாயில்
ஒரு கை தலையணையில்
ஒருக்கழித்து
ஒய்யாரமாய்ப் படுத்து
கண்கள் மூடி
கனவு காண
சுகமாயிருக்கிறது...

நாலு மாத வாடகை பாக்கி
நக்கலாய்
நாலுபேர் கேட்கும் படி
நடு ரோட்டில் நின்று
காலி பண்ணச் சொல்கிறான்
ஓலைக் குடிசைக்குச்
சொந்தக்காரன்...!

-பாளை.சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.