........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 549

நிலைத்த நிழல்

உன்னை விட உன் நினைவுகள்தான்
எனக்கு பிடிக்கும்.
ஏன் என்றால் அவை
என்றும் என்னை விட்டு
பிரிவதில்லை.!

நினைவுகள் விசித்திரமானவை
என்றோ ஒருநாள் அழுததை!
நினைத்தால் இன்று சிரிப்பு வரும்
என்றோ சிரித்ததை நினைக்கும் போது
இன்று அழுகை வரும்.1

என்னோடு நீ இருந்தாலும்
இல்லை என்றாலும் மண்ணோடு
போகும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை!

மீண்டும் பிறந்தால் உன் இதயமாக
பிறக்க வேண்டும்-உனக்காக
ஒவ்வொரு நிமிடமும் துடிப்பதற்கு.

மறக்க வேண்டும் என்று நினைப்பேன்
அவளைப் பார்க்கும் வரை.
ஆனால் அதை கூட மறந்து விடுவேன்
அவளைப் பார்த்த பின்பு!

அவளின் நினைவுகளை மறக்க முடியாமல்
நெஞ்சோரம் வைத்திருக்கிறேன்
நினைவாக அல்ல!
என் இதய துடிப்பாக...!

-மு.சந்திரசேகர், இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.