........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 552

சொல்லாமல் கொல்கிறாயே...!

இரவில் உறங்கும்
பூக்களைப்
பிடிக்கும் என்றாய்...

மழையில் நனையும்
இந்தப் பூமியைப்
பிடிக்கும் என்றாய்...

காலையில் உதிக்கும்
சூரியனைப்
பிடிக்கும் என்றாய்...

கடல் அலைகள்
உன் கால்களை
வருடிக்
கடலில் மோதும்
சமயம்
பிடிக்கும் என்றாய்...

உன் காதுகளை
தீண்டும் மெல்லிய
இசை
பிடிக்கும் என்றாய்...

இயற்கை
பிடிக்கும் என்றாய்...
செயற்கை
பிடிக்கும் என்றாய்...

ஆனால்
உன் நெஞ்சைக்
கவர்ந்த இந்த கள்வனின்
காதல் பிடிக்கும்
என்று மட்டும்
சொல்லாமல் கொல்கிறாயே...!

-த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.