........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 557

வேண்டாம்! ஆனால் வேண்டும்!!

நீ என்ன வாழ்வது
நான்தான் வாழனும்
என்கிற
தன்னல சமுதாயம்
நமக்கு வேண்டாம்!

அதிகாரம் தழைத்தோங்க
அறநெறிகள் படுத்துறங்கும்
ஆணவ சமுதாயம்
நமக்கு வேண்டாம்!

இனவெறி நிறவெறி என
தீவிரவாதம் கொள்ளும்
அடங்காச் சமுதாயம்
நமக்கு வேண்டாம்!

உழைப்பிற்கேற்ற ஊதியமில்லா
உழைக்கும் வர்க்கம்
ஏழ்மையின் பக்கமாய்
ஏமாற்றி வாழும் சமுதாயம்
நமக்கு வேண்டாம்!

பொதுநலம் காணும்
பொன்னான சமுதாயம்
வேண்டும் நமக்கு!
அறநெறிகள் கொண்ட
அகிம்சை சமுதாயம்
வேண்டும் நமக்கு!

பொருளாதார வளர்ச்சிக்கான
பொதுவுடமைச் சமுதாயம்
பார் போற்றும்
பொன்னான சமுதாயம்
வேண்டும் நமக்கு!

- எஸ்.சதீஷ்குமார், வெண்டையம்பட்டி.

 

 

 

 

 

m

 

எஸ்.சதீஷ்குமார் அவர்களின் பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.