........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 565

உனக்குப் பிள்ளையாய்...!

என் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;

பாட்டின் ஜதிபோல
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே - உன்
அசைவில் மட்டுமே அசைந்து -
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;

நடைபாதையின் முட்களை மிதித்து - என்
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன - அர்ப்பணமே
உன் அன்பிற்கு - அன்றும் இன்றும்
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!

உண்மையில், காற்றின் சப்தத்தை
இசையாக்கிக் கொடுத்த ஒரு
யாழின் பெருமை -
உன்னையே சாரும் அம்மா!

இனியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு
நான் - உனக்கு மட்டுமே பிள்ளையாக - பிறப்பேனம்மா!!

- வித்யாசாகர்

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு