கவிதை:
570
ஆடுகளத்தில் அநாதையாய்...!

முதன்முதலாய் - என்னில்
பூத்த காதல் பூ
நீயும் நானும்
காதலிக்கு முன்பே
கருகிப்போனது!
உனக்காக
என் மனதில்
நான் வரைந்த ஓவியங்கள்
நிறம் தீட்டப்படாமலேயே
வெறுமையாக!
நீயும் நானுமிணைந்து
நடத்திய காதல் பாடம்
வெற்றி தோல்வியின்றி
ஆடுகளத்தில் அநாதையாக...
உன் நாமம் கூறியே
நெஞ்சில் ஏற்றிய சந்தோஷங்கள்
தெவிட்டுதலோ தித்திப்போ
துளியுமின்றி
தொடர்ந்தபடி இன்னும்...
எப்போதுமே
என்
உயிரின் திணுசுகளையும்
சாமான்ய உணர்வுகளையும்
உன் ஞாபகங்கள்
ஆக்கிரமித்து வதைக்கும்...!
நினைவுகளில் எல்லாம்
உதிக்கின்ற
உன் எண்ணங்கள்
பெருமூச்சாய்
உஷ்ணம் கிளப்பி
சுடும் என் உயிரை...!
வற்றிப்போன
உன் மனசறிந்தும்
என் வாலிபமோ
உன்னில்
தொற்றியிருப்பது
பெரும் ஆச்சரியம்...!
இருந்துமென்ன..
ஓர் தடாகமாய் மாறிவிட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டுமே வந்து
நீச்சலடிக்க வேண்டுமென
கதறுகிறது...!
என் அணு ஒவ்வொன்றும்
எப்போதுமே
என்
உயிரின் திணுசுகளையும்
சாமான்ய உணர்வுகளையும்
உன் ஞாபகங்கள்
ஆக்கிரமித்து வதைக்கும்...!
நினைவுகளில் எல்லாம்
உதிக்கின்ற
உன் எண்ணங்கள்
பெருமூச்சாய்
உஷ்ணம் கிளப்பி
சுடும் என் உயிரை...!
வற்றிப்போன
உன் மனசறிந்தும்
என் வாலிபமோ
உன்னில்
தொற்றியிருப்பது
பெரும் ஆச்சரியம்...!
இருந்துமென்ன..
ஓர் தடாகமாய் மாறிவிட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டுமே வந்து
நீச்சலடிக்க வேண்டுமென
கதறுகிறது
என் அணு ஒவ்வொன்றும்...!
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா,
இலங்கை.
|