கவிதை: 612
மீனவனைக் காக்கட்டும்!

போன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க -
மீதி உயிரை தின்ன நாயி -
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!
பாவம் மேல பாவம் சேர்த்து
கடல் கடலா சுத்திவந்து
தமிழன்; தலைய பார்த்து சுட்டது
கேட்டா கடலில் - கோடு போட்டுக் காட்டுது!!
எம் சிறகொடிக்கப் பாக்குது
இனமருக்க பாக்குது -
நன்றிகெட்டோர் உறவால - எம்
கருவறுக்க துடிக்கிது!!
தமிழனென்றால் ஏத்தமா
திருப்பி யடிக்காத் - துச்சமா
மொத்த தமிழர் எழுந்து நின்னா
சிங்களந் தான் தாங்குமா?
ஆறுகோடி தமிழனும்
நூறு கோடி மனிதனும்
சேர்ந்து செய்த கொலையடா
மனிதமில்லா செயலுடா!
கர்ப்பினியை சுடுவதும்
மீனவனை கொள்வதும்
துயிலம் இடித்துத் தகர்த்ததும்
எவங் கொடுத்த தைரியம் ?
நாம் சும்மா இருந்த மடமைடா!
இரக்கம் இல்லா பிறவிகள்
தமிழச்சி மானம் சிதைத்த கோழைகள்
மண்ணு மேல கொடிய நட்டு -
கடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது!!
ஆடும் வரை ஆடட்டும்
அடிக்கும் வரை அடிக்கட்டும்
தமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்
ரத்தம் சுடும்வரை திமுறுடா;
தமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா!!!
சிறகொடிச்ச பாவமும்
முலையறுத்த கோபமும்
ரத்தம் பாய விட்ட கொடுமை
அத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா!!
ஆளுபவர் அழுவட்டும்
இருக்கை மீது உறங்கட்டும்
எழுந்து நிற்கும் இளைஞர் அணி -
துணிந்து - மீனவனை காக்கட்டும்; ஈழத்தை மீட்கட்டும்!!
-வித்யாசாகர்.
|