........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 612

மீனவனைக் காக்கட்டும்!

போன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க -
மீதி உயிரை தின்ன நாயி -
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!

பாவம் மேல பாவம் சேர்த்து
கடல் கடலா சுத்திவந்து
தமிழன்; தலைய பார்த்து சுட்டது
கேட்டா கடலில் - கோடு போட்டுக் காட்டுது!!

எம் சிறகொடிக்கப் பாக்குது
இனமருக்க பாக்குது -
நன்றிகெட்டோர் உறவால - எம்
கருவறுக்க துடிக்கிது!!

தமிழனென்றால் ஏத்தமா
திருப்பி யடிக்காத் - துச்சமா
மொத்த தமிழர் எழுந்து நின்னா
சிங்களந் தான் தாங்குமா?

ஆறுகோடி தமிழனும்
நூறு கோடி மனிதனும்
சேர்ந்து செய்த கொலையடா
மனிதமில்லா செயலுடா!

கர்ப்பினியை சுடுவதும்
மீனவனை கொள்வதும்
துயிலம் இடித்துத் தகர்த்ததும்
எவங் கொடுத்த தைரியம் ?
நாம் சும்மா இருந்த மடமைடா!

இரக்கம் இல்லா பிறவிகள்
தமிழச்சி மானம் சிதைத்த கோழைகள்
மண்ணு மேல கொடிய நட்டு -
கடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது!!

ஆடும் வரை ஆடட்டும்
அடிக்கும் வரை அடிக்கட்டும்
தமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்
ரத்தம் சுடும்வரை திமுறுடா;
தமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா!!!

சிறகொடிச்ச பாவமும்
முலையறுத்த கோபமும்
ரத்தம் பாய விட்ட கொடுமை
அத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா!!

ஆளுபவர் அழுவட்டும்
இருக்கை மீது உறங்கட்டும்
எழுந்து நிற்கும் இளைஞர் அணி -
துணிந்து - மீனவனை காக்கட்டும்; ஈழத்தை மீட்கட்டும்!!

-வித்யாசாகர்.    

 

 

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு