........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 636

பூவும் வண்டும்!

பூரித்த அழகு விரியலில்
பூவின் மதுர சுகந்தத்தில்
தாவிடும் வண்டு காதலிலே.
வண்டின் தாவல் விருப்பின்றேல்
வலிந்து போர்வை போர்த்தும்
வசதி நந்தவன மலருக்கில்லை.
மானிடப் பெண் மலரின்
மகத்துவ வசதி பகுத்தறிவு.
மனசில்லாவிடில் தடையிடுவாள்.
வண்டாடிய மலர் காற்றிலே
கொண்டாடுதோ! திண்டாடுதோ!
பண்பாடது தேன் பருகுதல்.
வண்டின் கம்பீர அமர்வில்
உண்ட தேன் இலயிப்பில்
நின்டுறாடுது மலர் தென்றலிலே!

-வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு