........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:64

தண்டவாளங்கள்

என்ன கருத்து வேறுபாடோ?
ஒன்றோடொன்று
ஒட்டவுமில்லை
உறவாடவுமில்லை
ஒரே நோக்கில்
தத்தம் போக்கில்!

அவசரமா?
அவசியமா?
நம்பி வந்தோரை
உரிய நேரத்தில்
உரிய இடத்தில்
ஒழுங்காய்ச் சேர்த்திடும்
நாணயம் காத்திடும்!

தன்மேல் வீசிடும்
எச்சங்கள்
கழிவுகளுக்காக
எவரையும்
ஏசுவதுமில்லை
நிந்திப்பதுமில்லை!

தற்கொலை
எண்ணத்தில்
தன்னைத்
தேடி வருவோரை
தடுப்பதுமில்லை
பாதுகாப்பதுமில்லை!

சிறுமதியாளர்
சதி
செய்தாலன்றி
தன் கடமையில்
சிறிதும்
தவறுவதில்லை!

தன்
உறுதியில்
கொஞ்சமும்
தளர்வதுமில்லை
விட்டுக்
கொடுப்பதுமில்லை!

தண்டவாளம் போன்றே
வாழ்க்கை
வாழ்ந்திடும்
எத்தனையோ தம்பதியர்
அன்றாட வாழ்வில்
நம் சந்திப்பில்...!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.   

 

 

m
 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.