........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 689

தீர்ப்புகள்!

என் கண்ணுக்கு
என் இமையே
பகை..!
மூடிக் கொள்கிறது
பார்க்க முடியவில்லை..!

என் வாய்க்கு
என் உதடுகளே
பகை..!
ஒட்டிக் கொள்கிறது
பேச முடியவில்லை..!

என் கனவுக்கு
என் தூக்கமே
பகை..!
கலைத்து விடுகிறது
நினைவில் இல்லை..!

என் கற்பனைக்கு
என் மனமே
பகை..!
சிதற விடுகிறது
முடிவு தெரியவில்லை..!

என் நடைக்கு
என் கால்களே
பகை..!
துவண்டு விடுகிறது
இலக்கு எட்டவில்லை..!

எனக்கு
நானே பகை..!
விடை தெரியாத
தீர்ப்புகள்..!

-பாளை.சுசி.

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு