........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 730

எஞ்சிய சுகம்!

தூண்டும் சுகம்
தீண்டும் போதும்
வருவதில்லை..

வேண்டும் சுகம்
தீண்டிய பின்
சுவைப்பதில்லை

தாண்டிய பின்
வேண்டிய சுகம்
நிலைப்பதில்லை

வேண்டிய சுகம்
வாடிய பின் கிடைப்பதில்
அரத்தமில்லை

தூண்டிய பின்
மீண்ட சுகம்
அலுப்பதில்லை...

எஞ்சிய சுகம்
மிஞ்சிய பின்
தொடர்வதில்லை

வாழ்வின் சுவை
ருசிக்கும் வரை
தெரிவதில்லை

ருசிக்கும் வாழ்க்கை
நிலைப்பதில்லை!

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு